Wednesday 21 November 2018

சைவசித்தாந்தத்தின் ஆகமங்கள் - Part II



      வேதங்களில் ஸூக்ஷ்மமாகச் சொல்லப்பட்ட
வைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம், 
இந்த ஆகமங்கள் இயற்றப்பட்டன.  ஒவ்வொரு 
ஆகமங்களிலும் சர்யா, க்ரியா, யோகம் மற்றும் 
ஜ்ஞாநம் என்ற நான்கு வகைப் பிரிவுகளைக் 
காணலாம்.  இவையனைத்தும் வழிபாட்டு முறை
களைத் திறம்பட எடுத்துரைக்கின்றன.

   இந்த நான்கு வகைப் பிரிவுகளில் முதல் பிரிவு 
சர்யா என்பதாகும்.  இதற்குத் திருமூலர்,
        எளிய நல் தீபம் இடல் மலர்க்கொய்தல்
        அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
        பளி பணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
        தளி தொழில் செய்வது தான் தாசமார்கமே.
என்று இலக்கணம் வகுக்கிறார்.  ஆக இந்த சர்யை 
நெறிப் படி ஒழுகுபவர், சிவனைப் பரம்பொருளா
கவும், தம்மை சிவனுக்குத் தாஸனாக/அடிமை
யாக/சேவகனாக/வும் இருத்திக் கொண்டு தாஸமார்
கத்தைப் பின்பற்றுவார்கள்.  இறுதியில் இதன் 
மூலம் சிவனது ஸாலோக்ய முக்தியை யடையலாம்.

     இரண்டாவதுபிரிவு க்ரியா என்பதாகும். 
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
         ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
         நேசித்து இட்டன்ன மும் நீர் சுத்தி செய்தல் மற்று
         ஆசற்ற சற்புத்திர மார்க மாகுமே.
என்று இதற்குத் திருமூலர் தந்த இலக்கணப்
படி சிவவழிபாட்டுக்குத் தேவையான மந்த்ரங்கள் 
மற்றும் தந்த்ரங்களை, ஒரு நல்ல குருவை அண்டி, 
அவரிடம் கற்றுத் தெளிந்து, ஸமய - விசேஷ – 
நிர்வாண தீக்ஷைகளைப் பெற்று ஸ்வாத்மார்த்த
பூஜை மற்றும் பரார்த்தபூஜை செய்து, அதன் 
மூலம் இறுதியில் சிவனது ஸாமீப்யமுக்தியை 
யடையலாம்.

மூன்றாவது பிரிவு யோகம் என்பதாகும்.  இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொண்டுப் போற்றிக் காப்பாற்றிக் கொள்ளும் ஒழுக்கங்களைப் பற்றிக் கூறுகின்ற நெறியாகச் சொல்லப் படுகிறது.  இதில் முப்பத்தாறு தத்துவங்கள், தத்துவங்களின் அதிகாரி, ஜீவாத்மா, பரமசிவன், சக்தி, ஜகத்துக்குக்காரணமான மாயை மற்றும் மஹாமாயைகளைக்காணும் வல்லமை, யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், த்யானம், தாபணா, ஸமாதி, மூலாதாரம் முதலிய ஆதாரங்களுடைய முறைமைகள் விளக்கப்பட்டு  காணப்படுகின்றன.

     நான்காவது பிரிவு ஜ்ஞானம் என்பதாகும். 
          தரிசிக்கப்பூசிக்கச் சிந்தனை செய்ய
         பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
         குரு பக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
         தரு முக்தி சார்பூட்டும் சன்மார்கம் தானே.
என்று திருமூலர் தந்த இலக்கணத்தின் படி,  ஒரு சிவ
பக்தன், தன்னை முழுவதுமாய்ச் சிவனுக்கு ஆத்மார்ப்
பணம் செய்து, சிவனை உருவ, அருவ, அருவுருவம் 
ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து,  ஸச்சிதாநந்த
வடிவாய்க் காணுகின்ற அறிவை எய்த முடியும்.  
அந்த அறிவு குருவின் திருவருளால் எய்தப்படும்.  
இந்த நெறிக்கு சன்மார்கம் என்று பெயர்.


முடிவுரை:-

     கர்ம மார்கம், ஜ்ஞானமார்கம், பக்தி மார்கங் களை போதிக்க வல்லவையான இந்த சைவ ஸித்தாந்த ஆகமங்கள்,  பரமசிவன் முதலாக குரு சிஷ்ய பரம்பரை வழியாக இடைவிடாது  உபதேசி க்கப்பட்டு வருவதாலும், ஸாக்ஷாத் சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியதாலும் சைவஸித்தாந்தத் துக்குப் ப்ரமாண நூல்களாகும்.  மேலும் இவைகள் சிவபெருமானிடத்தில்  அவபோதரூபமாக இருக்கின் றபடியால் எப்பொழுதுமழியாத நித்யமானவை என் றும் போற்றப்படுகின்றன.  எனவே நாம்  சைவஸித் தாந்த தத்துவங்களைச் சரியான குரு ஒருவரை அணுகி,  பூசித்து, வாசித்து, போற்றி செபித்து வாழ் வில் உய்வோமாக.

        “தென்னாடுடைய சிவனே போற்றி
                        எந்நாட்டவரக்கும் இறைவா போற்றி.



Wednesday 14 November 2018

சைவசித்தாந்தத்தின் ஆகமங்கள் - Part I



Image result for Sculptural Image of Siva


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ளப் பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே யென்று
ஓலமிடினும் உணரா யுணராய் காண்
ஏலக்குழலி பரிசேலோரெம்பாவாய்.

                  Image result for Sculptural Image of Siva

ஸர்வக்ருத் ஸர்வதாதாரம் ஸர்வஜ்ஞமபராஜிதம்
ஸர்வபூதாத்மபூதஸ்த்தம் ஸம்ஸ்ரயே ச ஸதாஸிவம்

     வைதிகம் மற்றும் லௌகிகம் என்று கலந்து காணப்படும் இப்பூவுலகில் பக்திநெறிகள் பல பெருகி வந்தன.  அவற்றபள் பரமசிவநைப் பெருந்தெய்வமாகக் கொண்டு சைவம் என்ற சமயம் ஒன்றும் ஏற்பட்டது.  பரமசிவனார் சிவம்/சிவன், பசுபதி, சங்கரன், தென்னாடுடையான் என்று பலவிதமான பெயர்களால் போற்றப்படுகிறார்.  ருக்வேதத்தில் சிவனை ருத்ரன் என்ற அழைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பின்னாளில் புராணங்களும் அவ்வாறே அழைத்த்தையும் தெளியலாம்.  நமது பாரதநாட்டினை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட குஷாணவம்சத்து அரசர்கள், சகர்கள், ஹூணர்கள் ஆகிய அரசர்கள் சைவமதத்தைத் தழுவிவந்தனர்.  வட இந்தியாவில் எல்லா இடங்களிலும் சைவமதம் தழைத்து வளர்ந்தது. தென்னிந்தியாவும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல.  நாயன்மார்கள் என்ற சமயக் குரவர்கள் பலர் அவ்வப்பொழுது அவதரித்துப் பல்லவர்கள், சோழர்கள், பாணடியர்களது கொடைத்திறனாலும் காக்குந் திறனாலும் சைவசமயம் விசுவரூபமெடுத்துச் சிறப்புடன் விளங்கக் காரணமாயிருந் தனர். சிவனை லிங்க வடிவில் வழிபட்டனர்.  கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண் டாம் நூற்றாண்டு வரைப் பல சிவாலயங்கள் தோன்றின.  கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல்  பன்னிரண்டாம் நூற் றாண்டு வரை காச்மீரத்தில்  பல இடங் களில்  சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன.  அங்கு சைவ சமயம் தரிசனம் அதா வது தத்துவமாகவும் உருவெடுத்தது.  அதனுடன் சாக்தம் எனப்படுகிற சக்திநெறியும் தழைத்து வளர்ந்தது.

                                 Image result for Image of Samaya Kuravargal

     சைவசமயம் உலகில் பரவலாகப் பலரால் பேரனபுடனும் பேராதரவுடனும் வளர்ந்தபொழுது, அது சைவம், பாசுபதம், காலாமுகம், காபாலிகம் என்ற நான்கு பெயர்களுடன் நான்கு வித பக்திநெறிகளாகப் பிற்காலத்தில் வகைப்படுத்தப்பட்டது.  சைவசித்தாந்தம், வட இந்தியாவில் பொதுவாக காச்மீரசைவ மதம் என்றும்; தென்னிந்தியாவில் வீரசைவமதம் என்றும் புகழப்பட்ட விளங்குகிறது.  இவையனைத்து நெறிமுறைக்கும் சங்கரனாரே முதற்தெய்வமாவார். அத்தகைய சங்கரனாருக்கு

விளக்கவுரை:-
சைவஸித்தாந்தத்தின் முக்கியக்கருத்து ஆகமம் என்பதில் தான் பொருட்செறிவுடன் காணப்படுகிறது.+கமம் என்ற இரு தமிழ்ச்சொற்களின் புணர்ச்சியால் ஆகமம் என்ற சொல் பெறப்படுகிறது.  ஆ என்றால் ஆத்மா; பசு என்ற பொருளும் தரும்.  ஆகலின் இவ்வுலக உயிர்கள்/உயிரினங்கள்;  கமம் என்றால் பதியைக் குறித்து நிறைவு தருவதாகும்.  ஆக, பசு+பதி= பசுபதியான சிவத்தோடு ஒன்றியிருந்து அதன் மூலம் நிறைவு என்ற முக்தியைப் பெறுதலாகும்.   
     இந்த ஆகமங்கள் சைவஸித்தாந்த்தின் முக்கிய இலக்கியநூல்களாகும். பொதுவாக இந்த ஆகமங்கள் ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியில் இயற்றப்பட்டன.  +கம் என்ற வினைவேர்ச்சொல்லிலிருந்து ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியின் வ்யாகரணம் என்ற இலக்கண அமைப்புவிதிகளின்படி "வந்தடைதல், போய்ச்சேர்தல், முற்காலந் தொட்டு வருகின்ற அறிவையுடையது மற்றும் இறைவனை அடைவிக்கும் கருவி அல்லது இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறும் அல்லது அறிவுறுத்தும் நூல்" என்ற பொருட்படிம்படி அமைந்தது இந்த ஆகமம் என்ற சொல். 

"வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுமுள்ளன" என்கிறார் திருமூலர்.  "ஆரணநூல் பொது ஆகமம்  அருஞ்சிறப்பு நூலாம், நீதியினால் இவை உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியன" என்று அருள்நிதி சிவாசார்யருடைய கூற்றா கும்.  "ஆகமமாகி அன்றண்ணிப்பான் தாள் வாழ்க" என்பார் மாணிக்கப் பெருமான்.  என்றால் சிவஜ்ஞானம், என்றால் மோக்ஷஸாதனம், என்றால் மலநாசனம் என்கிறது காமிகாகமம்.  அதாவது சிவஜ்ஞானத்தை யறிந்து மலத்தைப் போக்கி முக்தியடைதல்.இந்த ஆகமநூல்களில் முக்கியமாக சிவனது கோயில்களின் கட்டட அமைப்புகள்,  கோயில்களில் சிவனை வழிபடும் முறைகள், வழிபாட்டுக்குத் தேவையான மந்த்ரங்கள் மற்றும் தந்த்ரங்கள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.  பொதுவாக இந்த ஆகமங்களெல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியில் எழுதப்பட்டிருந்தாலும், தென்னிந்திய மக்களிடையே, அதிலும் குறிப்பாகத் தமிழர்களால் மட்டுமே இன்றளவும் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன.  ஆகையால் இந்த ஆகமங்களைக் கற்றுக்கொண்ட பிறகு தான், சைவசமயத்தின் பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.  இவைகளில் முக்கியமாக இருபத்தெட்டு ஆகமங்கள் மிகவும் புகழ்வாய்ந்கவை.  அவை என்னென்ன என்பதைச் சற்றே பார்ப்போம்.
                              Image result for Image of Shiva's five faces
 1.   ஸத்யோஜாதம் என்ற முகத்திலிருந்து காமிகம்,யோக-
ஜம்,சிந்த்யம்,காரணம்,அஜிதம் என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
 2.   வாமதேவம் என்ற முகத்திலிருந்து தீப்தம்,ஸூக்ஷ்மம்,
அம்சுமான், ஸுப்ரபேதம், பெயர்களுடன் ஐந்துவகை
யான  ஆகமங்கள் தோன்றின.
 3.   அகோரம் என்ற முகத்திலிருந்து விஜயம்,நிச்ச்வாஸம், ஸ்வாயம்புவம், அநலம், வீரம் என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
 4.   தத்புருஷம் என்ற முகத்திலிருந்து ரௌரவம், முகுடம், விமலம், சந்த்ரஜ்ஞாநம், பிம்பம் என்ற பெயர்க ளு டன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
 5.   ஈஸாநம் என்ற முகத்திலிருந்து ப்ரோத்கீதம், லலிதம், ஸித்தம், ஸந்தாநம், ஸர்வோத்தரம், பரமேச்வரம், கிரணம், வாதுலம் என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
இந்த இருபத்தெட்டு ஆகமங்களும் சிவபெருமானின் அங்கங்களாகக் கருதப்படுகின்றன.  அவையாவன :-

1. காமிகம்=திருவடிகள்        2. யோகஜம்= கணுக்கால்கள்
3. சிந்த்யம்=கால்விரல்கள்   4. காரணம்=கெண்டைக்கால்கள்
    5. அஜிதம்=முழங்கால்கள்   6. தீப்தம்=தொடைகள்
7. ஸூக்ஷ்மம்=குஹ்யம்      8. ஸஹஸ்ரம்=இடுப்பு
9 அம்சுமான்=முதுகு         10. ஸுப்ரபேதம்=தொப்புள்
11. விஜயம்=வயிறு           12. நிச்ச்வாஸம்=நாசி
13. ஸ்வாயம்புவம்=முலைமார்பு    14. அநலம்=கண்கள்
15.  வீரம்=கழுத்து              16. ரௌரவம்=காதுகள்
17.  முகுடம்=திருமுடி         18. விமலம்=கைகள்
19. சந்த்ரஜ்ஞாநம்=மார்பு   20. பிம்பம்=முகம்
21. ப்ரோத்கீதம்=நாக்கு      22. லலிதம்=கன்னங்கள்
23. ஸித்தம்=நெற்றி            24. ஸந்தாநம்=குண்டலம்
25. ஸர்வோத்தரம்= பூணூல்  26. பரமேச்வரம்=மாலை
27. கிரணம்= ரத்நாபரணம்     28.வாதுலம்=ஆடைகள்

     இந்த ஆகமங்கள் வேதத்தை யொற்றிவந்தவை.

XSABARI (SABARl)

  XSABARI (SABARl)   XSABARI (SABARl) was an aged woman of the tribe of forest-dwellers. Sri Rama, during his life in the forest, gave h...