Saturday, 17 February 2018

ஸ்ரீ மத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீரங்ககத்யம் Part - I

Image result for Image of Srirangagadyam
Image result for Image of Srirangagadyam  Image result for Image of Srirangagadyam


ஸ்ரீ:

முன்னுரை:-

     இவ்வுலகவாழ்க்கையில் உழன்று திரிகின்ற மானிடர்களான 
நம்மை மிகக் கருணையுள்ளம் கொண்டவனான எல்லாம் வல்லப் பரம்பொருளாகத் திகழ்கின்ற ஸ்ரீமந்நாராயணன், பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்துஎன்ற கருத்திணங்கவும்
அடையார் கமலத்தலர்மகள் கேள்வன் கையாழி யென்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டு மொண் சார்ங்க வில்லும்
புடையார் புரிசங்கமு மிந்தப் பூதலங் காப்பதற் கென்
றிடையே ராமாநுச முனி யாயின விந்நிலத்தே.
என்னும்படியாகவும் பூதபுரீ என்பதான ஸ்ரீபெரும்பூதூரில் கேவஸோமயாஜீ-காந்திமதீ என்கிற தம்பதிகளுக்குப் புதல்வனாக பகவான் ஸ்ரீமந் நாராயணனே ஸ்ரீமத்ராமாநுஜர் என்ற பெயரில் அவதரித்தது இந்நானிலமறிந்ததே.  இவர் தனது சீடர்களையும் மற்றுமுள்ள மக்களையும் உஜ்ஜீவிப்பதற்காக ஒன்பது பனுவல்களை யாத்தருளினார்.  அவற்றுள் ஸ்ரீரங்க கத்யம் என்பது ப்ரபத்தி என்பதான ரணாகதி  / அடைக்கலத்துக்கு 1. ஆநுகூல்ய
ஸங்கல்பம் = பகவானை அடைய உதவுபவைகளை ற்பது, 
2. ப்ராதிகூல்ய வர்ஜனம் =பகவானை அடையத் தடைகளை நீக்குவது, 3. ஆகிஞ்சன்யம் = கைம்முதலில்லாமை, 4.மஹாவிശ്வாஸம்= காப்பாற்றுவான் என்ற பெருத்த நம்பிக்கை, மற்றும் 5. கோப்த்ருத்வ வரணம் = காப்பாற்றும்படி வேண்டித் தஞ்சம்/அடைக்கலம்/ரணாகதி அடைதல் இவைகள் போதும் என்ற அளவில் ஸ்ரீமத்ராமாநுஜர், கத்யம் அதாவது உரைநடை வடிவிலே இந்த ஸ்ரீரங்ககத்யத்தை அருளியுள்ளார்.  சீடர்களின் நன்மையின் பாலுள்ள ஊற்றத்தையுடைய ஸ்ரீமத்ராமாநுஜர் அளவில் சிறிய
தாயினும் கருத்தாழங்கொண்ட இந்த ஸ்ரீரங்ககத்யத்தைச்  சற்றே தமிழ்மொழியில் கற்று இன்புறுவோம்.


                               Image result for Image of Sriranganathar

விளக்கவுரை:-
     ஸ்வாதீந-த்ரிவித-சேதநாசேதந-ஸ்வரூப-ஸ்த்திதி-
ப்ரவ்ருத்தி பேதம்; க்லே-கர்மாத்யേശஷ-தோஷ
அஸம்ஸ்ப்ருஷ்டம்; ஸ்வா பாவிக-அநவதிக-அதிய-
ஜ்ஞாந-பல-ஐ˜;வர்ய-க்தி-தேஜ: ஸௌ˜Pல்ய-வாத்ஸல்ய-
மார்தவ-ஆர்ஜவ-ஸௌஹார்த-ஸாம்ய- காருண்ய-
மாதுர்ய-காம்பீர்ய-ஔதார்ய-சாதுர்ய-ஸ்த்தைர்ய-தைர்ய 
சௌர்ய-பராக்ரம-ஸத்யகாம-ஸத்யஸங்கல்ப-க்ருதித்வ
க்ருதஜ்ஞதாதி-அஸங்கயேய-கல்யாண-குண-கணௌக- மஹார்ணவம், பரப்ரஹ்மபூதம்; புருஷோத்தமம், ஸ்ரீரங்க
சாயினம், அஸ்மத்- ஸ்வாமிநம், ப்ரபுத்த-நித்ய-
நியாம்ய-நித்யதாஸ்யைக-ரஸாத்ம-ஸ்வபாவோ()ஹம், ததேகாநுபவ:, ததேகப்ரிய:, பரிபூர்ணம், பகவந்தம், 
விசதமாநுபவேன நிரந்தரமநுபூய, ததநுபவ-ஜநித-
அநவதிக-அதிசய ப்ரீதிகாரித-அசேஷ-அவஸ்த்தோசித- 
அசேஷ-சேஷதைக-ரதிரூப-நித்யகிங்கரோ பவாநி 1

No comments:

Post a Comment

LAXMI PANDA BY SAVIE KARNEL

    Laxmi Panda: Netaji’s Youngest Spy Finally Gets Her Due Savie Karnel’s new book revives the forgotten heroine of the INA for today’s r...